Wednesday, February 22, 2006

தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலித்திடவே.......


இனிய தமிழ் பிரிஸ்பேன் உறுப்பினர்களே,
 
வணக்கம்,
 
மனதைக் கனியவைக்கும் ஓர் இனிய செய்தி! நாம் இது நாள்வரை அனுப்பிக் கொண்டிருக்கும் மின்னஞ்சலுக்கு மாற்றாக ஒலி மின்னஞ்சல் அனுப்பும் வசதிகிடைத்துள்ளது! இவ்வசதியைப் பயன்படுத்தி சாதனைகள் பலவற்றைச் சாதிக்கலாம்.

உறவுகளுக்கு ஒலியஞ்சல் அனுப்பலாம், நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம், குழலினிதான குழந்தைகளின் தமிழ் பேச்சை,தாய்மண்ணிலோ அல்லது அயலகத்தில் வாழும் பெரியவர்களுக்கு உவகை பொங்க அனுப்பலாம். அதற்குத் தாங்கள் செய்யவேண்டியது, கீழ்க்கண்ட வலைத்தளத்திற்குச்சென்று, உங்கள் விவரங்களைப் பதிவு செய்யுங்கள். அங்கே கிடைக்கும் மென்பொருளைத் தங்கள் கணனிக்குள் நிறுவுங்கள்.

www.VoiceSnap.com

அதன்பின்னர், VoiceSnap@AOL.COM வாயிலாக, உங்களுக்குக் கிடைக்கும் இரகசிய எண்ணைக் கொண்டு, மென்பொருளைத் திறவுங்கள்.

உங்கள் குரலைப் பதிவுசெய்யுங்கள். வெற்றியுடன் அனுப்பிவையுங்கள்.

ஒலியால் உலகை இணையுங்கள், மேலும் விவரங்கள் தேவைப்பட்டால்,

pascalganesh@hotmail.com

என்னும் முகவரியிலுள்ள திரு.கணேஷ் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.


அன்புடன்,
கண்ணன் நடராசன்

 

0 Comments:

Post a Comment

<< Home